Monday, December 12, 2016

How Lanka

ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி அஞ்சலி

சென்னை, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் மறைந்த   முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு, சசிகலா  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  முதலமைச்சர்  ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, போயஸ் தோட்ட இல்லத்திற்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்து மறைந்த   முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள  ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தைக் கண்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சசிகலா, தொண்டர்களின் துயரத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்.