Tuesday, September 5, 2017

How Lanka

பெங்களூரில் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
‘லங்கேஷ் பத்திரிகே’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த கவுரி லங்கேஷ் தமது வீட்டுக்குள் வைத்து நேற்று (05) சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஆளும் கட்சியின் சட்ட வல்லுநர் ஒருவரை பற்றி எழுதிய காரணத்தினால் கடந்த வருடம் அவருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்நது.
இருப்பினும் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் மேன்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியிருந்நது.
இந்நிலையில் தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க மன்றம் என்ற அமைப்பை தீவிரமாக முன்னெடுத்து வந்த அவரின் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.