Sunday, October 15, 2017

How Lanka

ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக தயார் - பிரதமர் அலுவலம்

முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தேவையேற்படும் பட்சத்தில் விடயங்களை தௌிவுபடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயார் என பிரதமர் அலுவலம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யும் போது பிரதமரின் பெயர் பயன்படுத்தப்பட்டமையினால் இந்த அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கோ, அல்லது அரச அதிகாரிகளுக்கோ குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அது தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு அரசாங்கம் எப்போதும் முன்னின்று செயற்படுவதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.