Saturday, November 4, 2017

How Lanka

தெல்கமுவ ஓயாவில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் நால்வரின் சடலங்கள் மீட்பு


மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போனவர்களுள் நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் பிள்ளையொன்றின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இன்று பிற்பகல் 2 மணியளவில் 8 பேர் நீரில் அடிச்செல்லப்பட்டனர்.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுற்றுலாவொன்றிற்காக நேற்று (03) இந்த பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

காணாமற்போன ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் தம்புள்ளை உயிர் பாதுகாப்புப் பிரிவினர் காணாமற் போனவர்களை தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையின் சுழியோடி பிரிவினரை விபத்து நேர்ந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷான் செனவிரத்ன தெரிவித்தார்.