Wednesday, January 24, 2018

How Lanka

பரிசிற்குள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ள செய்ன்நதி வெள்ளம்

பரிசிற்குள் மழை பெரிதாகப் பெய்யாவிட்டாலும், வெள்ள ஆபத்து பரிசையும் அதன் புறநகரப் பகுதிகளையும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.


செய்ன் நதி யின் நீர் மட்டம் , சனிக்கிழமைக்குள் ஆறு மீற்றர் உயரத்தினைத் தாண்டி விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



சில தொலைநகரங்களும், பரிசின் பல புறநகர்ப் பகுதிகளும் கடும் எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.



Paris,la Seine-et-Marne, les Yvelines, l'Yonne, les Hauts-de-Seine, la Seine-Saint-Denis, le Val-de-Marne,le Val-d'Oise,a Seine-Maritime, la Haute-Marne, L'Aube, le Doubs, l'Eure, l'Isère, le Jura, la Loire, la Marne, , la Meuse, la Nièvre, l'Oise, le Rhône, la Haute-Saône, la Saône-et-Loire
ஆகியவை தொடர்ந்தும் வெள்ளத்திற்கான செஞ்சிவப்பு எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த வெள்ள எச்சரிக்கையினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பரிசிற்குள் உள்ள RER-C நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.