Sunday, January 7, 2018

How Lanka

மைத்திரிபால சிறிசேன பணிப்புரை - கடனை மீள அறவிடும் நடவடிக்கை இடைநிறுத்தம்

சமுர்த்தி பயனாளிகள் தமது வீடுகளை புனரமைப்பதற்கு சமூர்த்தி வங்கியூடாக வழங்கப்பட்டிருந்த கடன் தொகையை 10 தவணைகளில் மீள அறவிடுவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உத்தரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து அறவிடப்படவிருந்த 2500 ரூபாவை அறவிடும் நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.