Friday, January 5, 2018

How Lanka

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது

கோப்பாய் மகாவித்தியாலயத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள யாழ் கல்விவலைய தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் முதற்படிவத்தை நிரப்பி கொள்ள முடியும்.

2017 – 2018 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பக் கையேடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தளத்தினூடாக மாத்திரம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கையேட்டில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 30, 500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 1, 63,104 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.