Wednesday, March 7, 2018

How Lanka

வட்டுக்கோட்டை பகுதியில் 75 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் கைது

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் 75 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 75 கிலோ கேரள கஞ்சாவையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 52 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விராணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.