Monday, March 19, 2018

How Lanka

ஜெயலலிதாவின் எதிரியும் சசிகலாவின் கணவனுமாகிய நடராஜன் மரணம்

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் இன்று சென்னையில் காலமானார்.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சசிகலாவின் கணவரான நடராஜன் (74) கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, அவ்வப்போது உடல்நலம் குன்றி, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்தார்

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதால் அவர் உடல்நலம் தேறி வந்தார்.


இதன் காரணமாக அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் வந்த அவருக்கு கடந்த சில தினங்களாக மீண்டும் உலநலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடராஜனுகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பெங்களூரு சிறையில் உள்ள அவர் மனைவி சசிகலா கணவரை காண பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து எம்பாமிங் செய்ய ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவர் இறந்துள்ள நிலையில் சசிகலா சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கேட்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவர் சென்னை வந்து, கணவரை பார்த்தார். அப்போது, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பது உள்பட அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்து இருந்தது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு நடராஜன் காலமானதைத் தொடர்ந்து எம்பாமிங் செய்யப்பட்டு, அதன் பின் பொதுமக்களுக்காக அஞ்சலிக்கு வைக்கப்பட்டுவிட்டு, அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கணவனை பார்க்க வேண்டும் என்று கூறி பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கேட்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி அவர் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கேட்கவுள்ளதாகவும், காலை 8.30மணிக்கு சசிகலாவின் வழக்கறிஞர்கள் பரோல் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரோல் மனுவோடு நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து வழங்கப்படும், பரோல் மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை விதிகளின் படி வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிறை நடைமுறைகளுக்கு பிறகு சசிகலா வெளியில் வருவார் என கூறப்படுகிறது.

15 நாட்கள் பரோல் கேட்டுள்ள நிலையில், அவருக்கு எத்தனை பரோல் வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சற்று முன் எம்பார்மிங் செய்யப்பட்ட அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏரளாமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.