Saturday, March 24, 2018

How Lanka

யாழ். பொது நூலகத்தில் அத்துமீறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஆர்யா

யாழ்ப்பாணத்தில் நடிகர் ஆர்யாவின் செயற்பாடு குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆர்யா, யாழ். பொது நூலகத்தில் அத்துமீறிய நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நூலகத்தின் வாசகர்கள் உள்ளிட்ட பலரும் குழப்பம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அதன் வெளிப்புறத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அத்துமீறி நூலகக் கட்டடத்தின் உள்ளே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் க.ஜெயசீலன் தெரிவித்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நடந்து கொண்டனர் என்று ஆணையாளர் தெரிவித்தபோதும், அங்கு பணியாற்றுவோர் படப்பிடிப்புக் குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது வாசகர்கள் உள்ளே நுழைவதையும் சுற்றுலாத்துறையினர் நூலகத்தைப் பார்வையிடுவதையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் அரை மணி நேரம் இந்தக் குழப்பம் நீடித்தது.

இதேவேளை, நடிகர் ஆர்யாவின் படப்பிடிப்பு பொது நூலகத்தில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சிலர் நூலகத்திற்கு வந்து அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்கவீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.