Monday, March 26, 2018

How Lanka

யாழ். மாநகரசபை மேயரானார் ஆர்னோல்ட்

யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவிற்காக இன்றைய தினம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முன்மொழியப்பட்ட இ.ஆர்னோல்ட் 18 வாக்குகளையும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக முன்மொழியப்பட்ட வி.மணிவண்ணன் 13 வாக்குகளையும், ஈ.பி.டி.பி சார்பாக முன்மொழியப்பட்ட ரெமிடியஸ் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முன்மொழியப்பட்ட இ.ஆர்னோல்ட் யாழ்.மாநகரசபை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், யாழ். மாநகரசபையின் பிரதி மேயர் தெரிவிற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அத்துடன், கூட்டம் தற்போது நிறைவடைவதாகவும், அடுத்த கூட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் யாழ். மாநகரசபையின் புதிய மேயர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலின் பின்பான யாழ். மாநகரசபையின் முதலாவது கூட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சமூகமளித்துள்ளனர்.

இரகசிய வாக்கெடுப்பின் மூலம் யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு இடம்பெறவுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் யாழ். மேயர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆர்னோல்ட் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.