Saturday, April 7, 2018

How Lanka

புத்தளத்தில் டெமடோல் வகை போதை மாத்திரைகளுடன் பாடசாலை மாணவர்கள் 3பேர் கைது

புத்தளத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் முன்று பேர் டெமடோல் வகை போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர், 9 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஆனமடுவ பிரதேசத்தின் பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்கு விடுமுறை வழங்க தயாராக இருந்த போது நேற்று இந்த மாணவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பதாக ஏனைய மாணவர்களால் ஆசிரியர் மற்றும் அதிபருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாணவர்களை பரிசோதனை செய்த போது அவர்களிடம் போதை மாத்திரை இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்த நிலையில், சந்தேக நபர்களான மாணவர்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு போதை பொருளை பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.