Saturday, April 14, 2018

How Lanka

வெறிச்சோடி போன குட்டி லண்டன் - நுவரெலியா

இலங்கையில் குட்டி லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் வெறிச்சோடி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த முறை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன் கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் காரணமாக இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நுவரெலியாவிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.


மேலும், சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு செல்வதை தவிர்த்திருப்பதால் அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், பஸார்கள் வெறிச்சோடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.