Friday, April 6, 2018

How Lanka

நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டை என கூறப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது அமர்வு இன்று இடம்பெற்றது.

இதில் தவிசாளர் தெரிவின் போது , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிலிப் பற்றிக் ரொஷானையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் நல்லதம்பி சசிக்குமாரையும் பிரேரித்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரேரித்த பிலிப் பற்றிக் ரொஷான் 7 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார்.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பிரேரித்த நல்லதம்பி சசிக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.