Sunday, May 6, 2018

How Lanka

இலங்கை கடற்பகுதியில் எரிபொருள் - ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் தயார்

இலங்கை கடற்பகுதியில் எரிபொருள் உள்ளதா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தயாராகி உள்ளன.

இதற்கான ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய 50000 சதுர கிலோ மீற்றர் கடல் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு இரண்டு வருடங்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு நடவடிக்கைக்காக இரண்டு நிறுவனங்களினாலும் 25 மில்லியன் டொலர் செலவிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை கடலில் எரிபொருள் வளம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அதனை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவில்லை.

இலங்கையின் வருடாந்த எரிபொருள் தேவைக்காக 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான பணம் செலவிடுகின்றது.

கடந்த வருடம் எரிபொருளுக்காக 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.