Tuesday, June 5, 2018

How Lanka

யாழில் மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் நீக்கம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் அகற்றப்பட்டுள்ளன.

குறித்த கேபிள்கள் நேற்று இலங்கை மின்சார சபையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பகுதியில் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகளிக்க முடியாத நிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

எவ்வாறாயினும் தொலைக்காட்சி கேபிளூடாக மின் கடத்தப்பட்டமையால் யாழில் ஏழு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், எதுவித அனுமதியும் பெறப்படாது மின் கம்பங்களினூடாக கேபிள் இணைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.