Sunday, June 3, 2018

How Lanka

அமெரிக்காவில் நடக்கும் பேஸ் பால் - பெருமை பெற்ற ரோகித் சர்மா

இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தலைவராக இருந்த ரோகித் சர்மா தலைமையிலான அணி கடைசி நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு அமெரிக்காவில் நடக்கும் பேஸ் பால் போட்டித் தொடரின் முதல் த்ரோவை வீசும் பெருமையை கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் மேஜர் லீக் பேஸ் பால் தொடர் நடைபெறுகிறது.

இதில் சீட்டில் மரினர்ஸ் அணிக்கும் - டாம்பா பே ரேஸ் அணியும் மோதும் போட்டியில் சிறப்பு விருந்தினராக ரோகித் சர்மா அழைக்கப்பட்டார்.

ரோகித் சர்மாவை பெருமைப் படுத்தும் விதமாக இந்த போட்டியை துவக்கி வைக்கும் பொருட்டு சியாட்டில் அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா, போட்டியில் டாம்பா பே ரேஸ் அணிக்கு எதிராக முதல் த்ரோவை எரிந்தார்.

பேஸ் பால் போட்டியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது