Friday, October 19, 2018

How Lanka

தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கவலையாக உள்ளது அஸ்வின்

இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 21ம் திகதி துவங்குகிறது.

இந்த தொடரில் வழக்கம் போல இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.

சகால், குல்தீப் ஆகியோரின் வருகையால், இந்திய ஒருநாள், டி-20 கிரிக்கெட் அணியில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் புறக்கணிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயமடைய, ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெற்றார்.

இந்நிலையில் அஷ்வின் இன்னும் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதுகுறித்து அஷ்வின் கூறுகையில், ஒருநாள், டி-20 போட்டிகளில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது.

என்னைப் பொறுத்த வரையில் அணியில் சேர்ந்த நாள் அன்றே என்றாவது விலக்கப்படுவேன் என்றும் தெரியும்.

தற்போது குல்தீப், சகால் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.