Thursday, December 27, 2018

How Lanka

பாணந்துறை பிரதேச சபையில் உறுப்பினர்களிடையே கடிபாடு

பாணந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்த வருடாந்த விருந்தில் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த இளம் உறுப்பினர் ஒருவர் அதிக குடிபோதையில் அட்டகாசம் செய்துள்ளார்.

அதிக குடிபோதையில் மற்றுமொரு உறுப்பினரின் முதுகு பகுதியை கடித்துள்ளார். இன்னொருவரின் மூக்கை கடித்தமையினால் பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பொது மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயற்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாதென சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கு தொடர்புடைய இளம் உறுப்பினர் அளவு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர் மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விருந்து பாணந்துரை திக்கல பிரதேச ஹோட்டலில் வார இறுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அதிகளவில் மதுபானம் அருந்திவிட்டு தவறாக நடந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.