Monday, August 28, 2017

How Lanka

தென் கொரியாவில் ஆசிய ஆணழகன் போட்டியில் ஈழத் தமிழர் - புஷ்பராஜ் வெற்றி

ஆசிய ஆணழகன் போட்டியில் தமிழர் லூசியன் புஷ்பராஜ் வெற்றி! இலங்கை வரலாற்றில் ஆசிய ஆணழகன் போட்டியில் முதல் தடவையாக முதலிடம் தென் கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் தமிழர் லூசியன் புஷ்பராஜ் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை வென்றுள்ளார்.

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையொருவர் வெற்றிப் பெற்றது இதுவே முதன்முறையாகும். மிஸ்டர் ஏசியா போட்டி பட்டத்தை வென்றதுடன் முன்னதாக நடத்தப்பட்ட 100 கிலோ எடைப்பிரிவிலும் லூசியன் புஷ்பராஜ் வெற்றிப்பெற்றுள்ளார். ஆசிய ஆணழகர் போட்டிகளில் 26 நாடுகளைச் சேர்ந்த 350இற்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் தமிழா.