Friday, September 8, 2017

How Lanka

துரையப்பாவில் பாடசாலைகள் மட்ட அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப் ஆரம்பம்

பாடசாலைகள் மட்ட அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமானது.
கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆடவர் பிரிவில் 164 பாடசாலைகளும், மகளிர் பிரிவில் 138 பாடசாலைகளும் கலந்துகொண்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
4X100 மீற்றர், 4X200 மீற்றர், 4X400 மீற்றர் மற்றும் 4X800 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகள் யாவும் 14, 16, 18, 20 ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளின் கீழ் இடம்பெறுகின்றன.
நாளை மறுதினம் (10) நிறைவடையவுள்ள இந்தப் போட்டிகளில் 12 வயதின் கீழ் 4X50 மீற்றர் அஞ்சலோட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.