Thursday, December 21, 2017

How Lanka

களனி பாலத்திலிருந்து கோட்டை வரை புதிய மேம்பாலம் - பிரதமர்

களனி பாலம் அருகில் இருந்து கோட்டை வரை புதிய மேம்பாலம் ஒன்றை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்மரசிங்க தெரிவித்தார்.

ராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் பொறியியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்த பிரதமர் அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த மேம்பாலத்தை திறக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.