Saturday, February 3, 2018

How Lanka

152 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது வேற்றுக் கிரக வாசிகள்

152 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது வேற்றுக் கிரக வாசிகள் பறக்கும் தட்டில் வேகமாக கடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 31ஆம் திகதி சந்திர கிரகணம் தோன்றியது. பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்தியேக கமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது.

இந்த நிலையில் அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் காட்சிகள் நடந்த தருணத்தில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்மப் பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது

குறித்த மர்மப் பொருள் என்னவென்று தெரியாத நிலையில், மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதேவேளை, அவை ஏலியன்களின் பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்னும் நாசா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது