Wednesday, March 28, 2018

How Lanka

62 கிழட்டு வயதிலும் விஜய் மல்லையாவின் காம கூத்தாட்டம்

இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற, சாராய வியாபாரியும், 'கிங் பிஷர்' விமான நிறுவன முன்னாள் உரிமையாளருமான, விஜய் மல்லையா, 62, மூன்றாவதாக, இளம் பெண் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மல்லையாவின் முதல் மனைவி, சமீரா தைபேஜி. விமானப் பணிப்பெண்ணான இவரை திருமணம் செய்த ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், 1987ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் உள்ளார்.

அதன் பின், 1993ல், நண்பரின் மனைவியான, பெங்களூரைச் சேர்ந்த ரேகாவை, இரண்டாவதாக திருமணம் செய்தார்; இவர்களுக்கு லீனா மற்றும் தான்யா என, இரண்டு மகள்கள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி ரேகாவிடம் இருந்து, விவாகரத்து பெறாத நிலையில், மூன்றாவதாக, தன் விமான நிறுவனத்தில், விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய, பிங்கி லால்வானி என்ற இளம் பெண்ணை, மல்லையா திருமணம் செய்ய உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் மோசடி செய்த மல்லையா, பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற போது, அவருடன், பிங்கியும் சென்றார். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

லண்டன் நீதிமன்றத்தில் நடந்த, 'கிங் பிஷர்' விமான நிறுவன வழக்கு விசாரணையின் போதும், மல்லையாவுடன், பிங்கியும் வந்திருந்தார்.

தனக்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் உடன் இருந்த பிங்கியை, மல்லையா, மூன்றாவதாக திருமணம் செய்ய இருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.