Wednesday, April 11, 2018

How Lanka

நீயெல்லாம் ஒரு பவுலரா வினய் குமாரை விடாது வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

சென்னை அணியுடனான தோல்வியால் வினய் குமாரை ரசிகர்கள் நீயெல்லாம் ஒரு பந்து வீச்சாளராக என கேள்வி கேட்டுள்ளனர்.

கொல்கத்தா-சென்னை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 202 ஓட்டங்களை குவித்தது.

சவாலான இலக்கு என்பதால் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பில்லிங்ஸ் அதிரடி அரைசதம் விளாசியதால் போட்டி பரபரப்பானது. பில்லிங்ஸ் வெளியேறியவுடன் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கொல்கத்தா அணியின் தலைவரான தினேஷ் குமார் அனுபவ பந்து வீச்சளரான வினய் குமாரிடம் கொடுத்தார். அவரோ நோ பால் வீச அந்த பந்தில் சிக்ஸர் போக என ஆட்டம் அப்படியே தலை கீழாக மாறியது, இதனால் சென்னை அணி கடைசி ஓவரில் 17 ஓட்டங்களை எட்டிப் பிடித்து த்ரில் வெற்றி பெற்றது.


இந்நிலையில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் வினய் குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம், இது ஒரு விளையாட்டு, போட்டி எப்போது வேண்டும் என்றாலும் மாறலாம், அப்படிப் பார்த்தால் பெங்களூரு அணிக்கு எதிராக 9 ஓட்டங்கள் இருந்த போது பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தேன். அதே போன்று மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது 10 ஓட்டங்கள் இருக்கும் போது வெற்றி தேடித் தந்தேன் என குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட ரசிகர்கள் சிலர் நிங்கள் வெளியே போய் பெஞ்ச்ல் அமர்ந்து வேடிக்கை பாருங்கள் என்றும் கடைசி ஓவரில் நோ பால் வீசியது எப்படி சரி என்று சொல்வீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஒரு ரசிகர் நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருந்தால் பிராவோவுக்கு மட்டும் நோ பால் போடாமல் போட்டியை அப்படியே மாறியிருக்கலாம் நீங்கள் எல்லாம் ஒரு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.