Wednesday, April 4, 2018

How Lanka

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - நாளை முதல் விடுமுறை

2018 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைகின்றது.

அந்த வகையில் அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்கள பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக, நாளை முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் 11ம் திகதி 18 வரை முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.