Saturday, April 28, 2018

How Lanka

சிலாபம் பிரதேசத்தில் ஒரே நாளில் மீன்களால் கிடைத்த அதிஷ்டம்

சிலாபம், இரணவில பிரதேசத்தில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இந்த மீன்கள் தங்கள் வலைக்கு சிக்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


நீண்ட காலமாக இரணவில கடற்பகுதியில் இவ்வளவு பாரிய அளவு மீன்கள் கிடைத்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடலில் கிடைத்த அதிஷ்டம் காரணமாக பெருமளவு பணம் கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.