Monday, May 21, 2018

How Lanka

ஏ- 9 வீதி தாழிறங்கியது - கண்டி நோக்கி பயணிப்போர் கவனம்

கண்டி- யாழ்ப்பாணம் ஏ- 9 வீதியின், ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால், அந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகமிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதியே தாழிறங்கியுள்ளது.

இந்த வீதி, இரண்டு ஒழுங்கைகளை கொண்டிருந்தாலும், வீதி தாழிறங்கிய பகுதியில் மட்டும், ஒரு ஒழுங்கை மட்டுமே பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை , தொடருமாயின், இந்த வீதியின் சில பகுதிகள் ஆங்காங்கே தாழிறங்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.