Friday, May 4, 2018

How Lanka

வடக்கு - கிழக்கு - தெற்கு இடையே அதிவேக நெடுஞ்சாலைகள்

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஏற்பாடுகளையும் முயற்சிகளையும் செய்யவுள்ளது என்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இன்று பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.