Thursday, May 3, 2018

How Lanka

முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் புகைப்பட அல்பம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை முப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது.


அந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரினால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தம் நடைபெற்று 9 வருடங்கள் கடந்த நிலையில் குறித்த அல்பத்தில் காணப்படும் புகைப்படங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்பதை உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.