Thursday, May 10, 2018

How Lanka

விலைவாசி, வரி அதிகரிப்பு - மக்கள் கடும் வெறுப்பு - கவிழும் நிலையில் கூட்டாட்சி


கூட்டாட்சி மீது மக்கள் கடும் வெறுப்படைந்துள்ளனர். விலைவாசி அதிகரிப்பு மற்றும் வரவு செலவுத்திட்டத்தில் கூறியவற்றை அமுல்படுத்தாமை, வரி விதிப்பு போன்ற பல காரணங்களால் மக்கள் மத்தியில் கூட்டரசாங்கம் மீது கடும் அதிர்ப்தியும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

காரணங்களை பார்போம்:-

  • வரவு செலவுத்திட்டத்தில் தொலைபேசி மற்றும் இணைய இணைப்பின் மீதான வரி முழுமையாக நீக்கப்படும் என மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார் ஆனால் இன்று வரை அது அமுல்படுத்தபடவில்லை அத்துடன் 50% வரியை மக்கள் செலுத்துகின்றனர்.
  • மோட்டார் வாகன கொள்வனவில் வாகத்தின் விலையைவிட இருமடங்கான வரி செலுத்தும் நிலை அதாவது 200% வரி.





  • மக்களிடையே கடும் வரி அறவிடல் , விலைவாசிகளை அதிகரித்துவிட்டு ஆடம்பர கார்களில் திரியும் அமைச்சர்கள்
  • சம்பள உயர்வு என கூறியும் அவற்றை பல காலமாக அமுல்படுத்தாமை
  • கடந்த கால ஆட்சியில் கொள்ளையடித்தவர்களை இன்னும் கைது செய்யாமை
  • மற்றும் நேற்யைதினம் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் விதமாக எரிபொருள் - மண்ணெய் விலையை 101 ரூபாவாக அதிகரித்தமை
  • பெற்றோல் உட்பட ஏனைய எரிபொருட்களின் விலையை அதிகரித்தமை
  • போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாமை.
இவ்வாறான பல காரணங்களால் கூட்டாட்சி மீது மக்கள் கடும் வெறுப்படைந்துள்ளனர்.
நாங்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் வரி அறவிடுகிறீர்கள். போதாக்குறைக்கு தற்சமையம் மண்ணெய் முதல் எரிபொருட்களின் விலையையும் அதிகரித்து விட்டீர்கள். இது என்ன நாடா இல்லை  வேறு ஏதாவதா என்று மக்கள் கடும் விரக்தி மற்றும் வெறுப்படைந்துள்ளனர்.