Monday, May 21, 2018

How Lanka

யாழ். கோப்பாய் வடக்கு இலகடி பகுதியில் பாரிய கைத்தொழில் பேட்டை

யாழ். கோப்பாய் வடக்கு இலகடி பகுதியில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொழிற்பேட்டையில் முதல்கட்டமாக 30 பேர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளனர்.

அத்துடன் மூன்று மாதங்களில் 100 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நவீன இயந்திரங்களுடன் கூடிய இந்த கைத்தொழில் பேட்டையில் சித்திரம், தையல், கைவினைப் பொருட்கள் என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதன்போது ஐ.பி.சி தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் கருத்து தெரிவிக்கையில், இன்னும் போர் ஓயவில்லை. தொழிலுக்கான போர் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

அத்துடன், தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படுகிறது.

இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் பொருளாதாரம் கட்டியெழுப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வட மாகாண கைத்தொழில் திணைக்களப் பணிப்பாளர் ஸ்ரீமோகன், வலி கிழக்கு பிரதேச செயலாளர், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த கைத்தொழில் பேட்டை வடக்கின் முதலாவது கைத்தொழில் பேட்டை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.