Monday, May 21, 2018

How Lanka

தைரியமிருந்தா நீ வந்து பந்து போடு! பாண்ட்யாவுடன் கேமை கேட்ட ரிஷப் பாண்ட்

நேற்றைய போட்டியின் போது மும்பை வீரர் ஹார்திக் பாண்ட்யா, டெல்லி வீரர் ரிஷப் பாண்ட் ஆகியோர் செல்லமாக சண்டை போட்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.


இந்நிலையில் இப்போட்டியின் போது மும்பை அணியின் பந்து வீச்சாளரான பாண்ட்யாவின் ஓவரை ரிஷப் பாண்ட் வெளுத்து வாங்கினார்.

இதைத் தொடர்ந்து க்ருணல் பாண்ட்யா ஓவர் வீசிக் கொண்டிருந்த போது, டெல்லி வீரர் ரிஷப் பாண்ட் நீ வந்து பந்து போடு என்பது போல் செய்கை காட்ட, அதற்கு பாண்ட்யா போ..போ என்று செய்கை காட்டினார்.

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.