Sunday, June 17, 2018

How Lanka

ஜ.தே.க வேட்பாளர்களை எதிர்க்கும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருக்கு எதிராக களமிறங்கும் எந்தவொரு நபருக்காகவும் நாம் ஆதரவாக செயற்படுவதற்கு தயாராகவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார இறுதி பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வு கூறல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக களமிறங்குபவருக்கு நாம் ஆதரவளிப்போம், அது கோத்தபாய ராஜபக்சவாகவோ, சமல் ராஜபக்சவாகவோ அல்லது மைத்திரிபால சிறிசேனவாகவோ இருக்கலாம்.

எவ்வாறாயினும்ட சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியானது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமாயின் தென்னிலங்கையில் பேராதரவு கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவினதும் சிறுபான்மை மக்களின் ஆதரவைக் கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேனவினதும் ஆசிர்வாதத்தினை பெற்ற நபராக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.