Tuesday, June 5, 2018

How Lanka

திருகோணமலை சல்லி கோவில் இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டு

திருகோணமலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை சல்லி கோவில் வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே சற்று முன்னர் இடம் பெற்ற மோதல், இறுதியில் வாள்வெட்டுடன் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முரண்பாடே, இன்று வாள்வெட்டு இடம்பெறக் காரணம் என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.