Tuesday, June 5, 2018

How Lanka

இலங்கையில் சமூக வலைத்தளமான பேஸ்புக தடை செய்யப்பட்டமையினால் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்

இலங்கையில் சமூக வலைத்தளமான பேஸ்புக தடை செய்யப்பட்டமையினால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதி வரை இலங்யைில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பலவற்றை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தடை காரணமாக இலங்கை பொருளாதாரத்திற்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக உலக புகழ்பெற்ற அமைப்பான நெட் ப்லொக்ஸ் என்ற அமைப்பின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தொகை இலங்கை நாணயத்தில் 4.7 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் முடக்கம் காரணமாக இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்நிய செலாவணிக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், வெளிநாடுகளுக்கு இணைய அழைப்பு மேற்கொள்ள முடியாமல் போனமையினால் வெளிநாட்டு அழைப்புகளுக்காக பாரிய அளவு செலவிடப்பட்டுள்ளது.

இந்த நட்டங்கள் அனைத்தும் இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நெட் ப்லொக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.