Friday, July 21, 2017

How Lanka

மைத்திரி ரணிலுக்கு மகிந்த விடுத்த சவால் - இரு பௌர்ணமி தினங்களில் அதிர்ச்சி

இன்னும் இரு பௌர்ணமி தினங்களில் அதிர்ச்சி காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தேசிய அரசாங்கத்தில் இருக்கம் பாரிய குழு ஒன்று விரைவில் தம்முடன் இணைந்துகொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் ஒரு தொகுதியினரும் தம்முடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் இரண்டு பௌர்னமி தினங்களில் அதிர்ச்சி காத்திருக்கின்றது. ஒரு அணி அரசியல் அமைப்பு சபையிலும், மற்றைய அணி வெளியில் இருந்து கொண்டு புதிய அரசியல் அமைப்பை தடுப்பதுமே தமது திட்டம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.