Friday, November 24, 2017

How Lanka

அமரவங்ச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை ராமக்ஞ மகா நிக்காயவின் மறைந்த அதிவண. மாத்தளை அமரவங்ச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நாத்தண்டிய, தப்போவ, போதிமாலக்க புஷ்பாராம விகாரைக்கு இன்று முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட விகாரையின் மகாசங்கத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.


1956ஆம் ஆண்டு மக்கள் ஆட்சியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களுக்கு இளம் பிக்குவான மறைந்த மாத்தளை அமரவங்ச தேரர் அவர்கள், உறுதுணையாக செயற்பட்டதுடன், அன்று முதல் இன்று வரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து செயற்பாடுகளிலும் கட்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.