Saturday, January 27, 2018

How Lanka

முதல் முறையாக இலங்கையில் இருந்து இரண்டு தொடர்பாடல் செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது

முதல் முறையாக இலங்கையில் இருந்து இரண்டு தொடர்பாடல் செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானின் கியூடெக் நிறுவனத்தின் உதவியுடன் 2019 ஆம் ஆண்டும நெனோ தொழிநுட்பத்துடனான செய்மதியொன்று ஏவப்படுவதாக ஆதர் சி கிளார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்மதி 2020ஆம் ஆண்டு ரஷ்யாவின் உதவியுடன் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்புவதற்கு, விவசாயம், தொடர்பாடல், நீர்வழங்கல் மற்றும் சூழலியல் துறைகள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஆதர் சி க்ளார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது