Saturday, January 20, 2018

How Lanka

புத்தளம் கல்பிட்டியில் குவியும் வெளிநாட்டவர்கள் - காரணம் Kitesurfing விளையாட்டு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவிலானோர் புத்தளம் கடல் பகுதிக்கு படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் கற்பிட்டி கடற்பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Kitesurfing விளையாட்டே அதற்கு காரணமாகும்.


இதற்கு முன்னர் அருகம்பே பிரதேசத்தில் இயங்கிய Kitesurfing எனப்படும் பட்ட விளையாட்டு தற்போது கற்பிட்டி கடலிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த பிரதேசத்தின் ஆழமற்ற கடல் பகுதியும், அளவான காற்று வீசுவதனால் Kitesurfing விளையாடுவது ஒரு பாக்கியமாகும் என விளையாட்டில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நோக்கில், இலங்கையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.