Tuesday, February 27, 2018

How Lanka

சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் இனவிருத்தியை தடைசெய்யும் மருந்து - அம்பாறையில் முஸ்லீம் ஹோட்டல் தரைமட்டம்

அம்பாறையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் குறித்து அதிர்ச்சியான சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் இனவிருத்தியை தடைசெய்யும் மருந்து கலந்த உணவை வழங்கியதாலேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது குறித்த உணவை விற்ற விற்பனையாளரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், இதன்போது எடுக்கப்பட்ட காணொளி சமூகவலைத் தளங்களில் வெளியாகி உள்ளன.

தமிழர், சிங்களவர் வாழும் இடங்களில் மிகப்பெரிய உணவகங்களை திறந்து இனவிருத்தியை குறைப்பதற்கான இரசாயன மருந்து வகைகளை உணவில் கலந்து கொடுத்து தமிழர் சிங்களவரை மலடாக்கி குழந்தை பெறும் வீதத்தை குறைப்பதற்கே இந்த திட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அம்பாறை நகரில் சிங்களவர் வாழும் பிரதேசத்தில் சிங்களவருக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களில் இனவிருத்தியை குறைக்கும் மருந்து கலந்ததை கடையின் உரிமையாளர் ஒத்துக்கொள்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த கடை, பள்ளிவாசலை தரைமட்டமாக்கியுள்ளனர். அம்பாறையில் பதற்றம் ஏற்படுவதற்கு இதுவே காரணம் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டை நிலைகுலையச் செய்யும் நோக்கில் நேற்று இரவு ஒரு சில குழுவினரால், அம்பாறை பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலும், சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கில் இந்த சதிகார்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் சதிகாரர்களின் வலையில் சிக்கிவிட வேண்டாம்

சிந்தித்து செயற்படுமாறு தேசப்பற்றுள்ள அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வாகனங்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை 1.00 மணி வரை, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சில குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.