Sunday, June 17, 2018

How Lanka

உலக கிண்ணம் கால்பந்துப் போட்டியில் நிலநடுக்கம் ஏற்படுத்திய மெக்சிகோவின் கோல்

உலக கிண்ணம் கால்பந்துப் போட்டியில் மெக்சிகோ அணி வீரர் அடித்த கோல் அந்நாட்டில் நில நடுக்கத்தையே ஏற்படுத்திவிட்டது.

ஃபிபா உலக கிண்ண கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் திகதி தொடங்கி ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இதில் நடைபெற்ற ஜேர்மனி – மெக்சிகோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜேர்மனி அணியை மெக்சிகோ அணி 1-0 என்று தோற்கடித்தது.

இப்போட்டியில் மெக்சிகோ அணி சார்பில் 35வது நிமிடத்தில் தமக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார் ஹிர்விங் லொசானோ.

இந்தப் போட்டியை மெக்சிகோவில் பெருந்திரளாகக் கூடிப் பார்த்துக்கொண்டிருந்த அந்நாட்டு ரசிகர்கள், தங்கள் அணி முதலில் கோல் போடப்பட்டதும் ஆரவாரத்துடன் துள்ளிக்குதித்தனர்.

ஏராளாமானவர்கள் ஒரே நேரத்தில் குதித்த காரணத்தால், லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மெக்சிகோ அரசு கூறியுள்ளது.