Saturday, November 18, 2017

How Lanka

ஒரு நாள் சேவையில் மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற முடியும்

ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு இந்த முறை தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை உடனடியாக வழங்கும் வகையில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒருநாள் சேவையொன்றை நடத்த ஆளைப் பதிவு செய்யும் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக திணைக்கள ஆணையாளர் பீ.வீ.குணதிலக்க தெரிவித்தார்.

அன்றைய தினம் பாடசாலை விண்ணப்பதாரிகள் நேரடியாக வர வேண்டியதில்லை. பாடசாலை மாணவர்களின் உறவு முறையை உறுதிப்படுத்தக்கூடிய வேறு நபர்கள் கிராம அலுவலரின் கடிதத்துடன் தேசிய அடையாள அட்டையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.