Wednesday, March 28, 2018

How Lanka

இலங்கையில் 529 பேஸ்புக் கணக்குகள் அதிரடியாக முடக்கம்

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்கள் இலங்கையில் 529 பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போலி கணக்குகளை ஆரம்பித்தல், பேஸ்புக் கணக்குகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கனிணி அவசர பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பேஸ்புக் தொடர்பான முறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 3600 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.