Wednesday, March 28, 2018

How Lanka

இன்று இரவு 10 மணிக்கு முன்னர் - சாதாரண தர பரீட்சை பெறுபேறு

 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு இன்று இரவு 10 மணிக்கு முன்னர் இணையத்தில் வெளியிடப்படும்.

இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய கா.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் 969 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.