Saturday, December 29, 2018

How Lanka

மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் படுகாயம் - காரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டின் போது இடம்பெற்ற விபத்தில் யோஷிதவின் முகம் மற்றும் தலைப்பகுயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது முகம் இரும்பு தகடுகள் பயன்படுத்தி மீளவும் சரி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மீளவும் யோஷித ராஜபக்ச ரகர் விளையாட முடியாதென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய பின்னரே சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.