Thursday, August 25, 2016

How Lanka

சுவிஸ் வாசிகளுக்கு 4 இலட்சம்

தனது நாட்டில் வசிக்கும் மக்களுக்காக மாதாந்தம் 2,500 டொலர்களை வழங்குவதற்கு சுவிஸ் அரசு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய மக்கள் தொழில் புரியும் இடங்களிலேயே இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார இலாபத்தை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குழந்தைகளுக்காக மாதாந்தம் 675 டொலர்கள் வழங்கவுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து வந்து சுவிஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கான கொடுப்பனவாக குறித்த பணம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நிதி தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, உலகின் செல்வந்த நாடுகளுள் சுவிஸ்லாந்து முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 8 மில்லியன் சனத்தொகையை கொண்டுள்ள சுவிஸ்லாந்தின் குடியுரிமையைப் பெறுவதற்கு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரத்தை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.