Tuesday, October 17, 2017

How Lanka

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 792 பில்லியன் ரூபா செலவிடப்படவில்லை - பந்துல குணவர்தன

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 792 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் செலவிடப்படவில்லை: பந்துல குணவர்தன.
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 792 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் செலவிடப்படவில்லை: பந்துல குணவர்தன

கடந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 792 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் செலவிடப்படவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

"""   அரசாங்கத்தின் கணக்காய்வாளர் நாயகம் நிதி தொடர்பான அறிக்கையில், நிதி பொறுப்புக்கூறல் தொடர்பில் சட்டங்களைப் புறந்தள்ளி முதற்தடவையாக அரசாங்கத்தின் துண்டு விழும் தொகை 83.3 ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டத்தின் அடிப்படையில் பிரதமரின் கூற்று முற்றிலும் வித்தியாசமானதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது . 2016 ஆம் ஆண்டில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் தவணை மற்றும் வட்டி செலுத்தல் என்பன எமது ஆட்சிக் காலத்திலேயே அரச வருமானத்திற்கு மேலாக அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. 2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் எவ்வித பிரச்சிணைகளும் இல்லை. இந்த அரசாங்கத்திற்கு அல்ல 2020 இல் வரும் அரசாங்கத்திற்கே இதனால் பிரச்சிணை உண்டாகும். அரசாங்கத்தில் உள்ள சூத்திரதாரிகள் மிகவும் சூட்சுமமாக ஜனாதிபதியையும் பிரதமரையும் சூழ்ச்சிக்குட்படுத்தி மிகவும் பிழையான தரவுகளை வழங்கியுள்ளனர். முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அதன் பிரதான பிரதிவாதியாவார். 2016 இல் கல்வியமைச்சிற்கு ஒதுக்கிய நிதியில் 32 வீதமே வழங்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி அதாவது 20 வீதம் செலவாகவில்லை. 792 பில்லியன் ரூபா அதன் பெறுமதி. அதனால் தான் மக்கள் தம்மிடம் பணம் இல்லை என்கின்றனர். அரசாங்கத்தின் செலவே மக்களின் வரவாகும். பணம் பரிமாறப்பட வேண்டுமெனின் பிரதான செலவுனர் என்ற வகையில் அரசு செலவளிக்க வேண்டும்.   """"