Saturday, December 23, 2017

How Lanka

சிக்கினான் சித்தப்பு (கள்ள சாமியார்) - தினமும் படுக்கைக்கு 10 பெண்கள்


டெல்லியில் உள்ள ஒரு சாமியார் தன்னை கடவுள் கிருஷ்ணர் எனக் கூறிக்கொண்டு, பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ரோகினி பகுதியில் ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரம் உள்ளது. அங்கு விரேந்திர தேவ் திக்‌ஷித் பல பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.


அந்நிலையில், அந்த ஆசிரமத்திலிருந்து தப்பி வந்த ஒரு பெண் ஒரு பத்திரிக்கை அளித்த பேட்டியில், அந்த ஆசிரமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அடைத்து வைத்து, அவர்களை சாமியார் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்.

என்னையும் பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கு ஒரு இருட்டு அறை உள்ளது. அதில் பல பெண்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி செய்தியை கூறினார். இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என ஒரு அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

எனவே, ஆசிரமத்தை வீடியோ பதிவுடன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, போலீசாரும், பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக்குழுவை சேர்ந்த சிலரும் கடந்த 22ம் தேதி அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு அடைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த சாமியார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இவர் தன்னை பகவான் கிருஷ்ணன் எனக் கூறிக்கொண்டு 16000 பேரை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். மேலும், தினமும் தனது படுக்கையில் 10 பெண்கள் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவாராம். அவரின் கொடுமை தாங்க முடியாமல் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

போலீசாரின் விசாரணையில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள சாமியாரின் ஆஸ்ரமத்தில் 100க்கும் மேற்ட்ட சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்வதாக, 40 பெண்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். பகவான் கிருஷ்ணரை போல 16000 பேரை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி தினசரி 10 பேரை படுக்கைக்கு அழைத்துள்ளார் பலே சாமியார். அந்த சாமியாரின் கொடுமையை தாங்க முடியாமல் பல பெண்கள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டெல்லியின் ரோகினி என்ற பகுதியில் உள்ளது ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆஸ்ரமம். இங்கு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தும், போலீஸார் கண்டுகொள்ளவில்லை எனவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சாமியாரின் பிடியில் பெண்கள் இந்நிலையில் இங்கிருந்து தப்பி வந்த 32 வயதான ஒரு பெண் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அந்த ஆஸ்ரமத்தில் 100க்கும் அதிக பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

மகளிர் நல அமைப்பு 

அங்கு இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு, யாரும் யாரிடமும் பேசக்கூடாது என கட்டளைகள் விதிக்கப்படுவதாகவும், பல பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளார். என்னையும் பல முறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இவரின் பேட்டியை தொடர்ந்து அரசு சாரா அமைப்பு அந்த ஆஸ்ரமம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆஸ்ரமத்தை வீடியோ பதிவுடன் ஆய்வு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரமத்தில் இளம் பெண்கள் 

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் போலீசார் உதவியுடன் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழு வெள்ளிக்கிழமையன்று சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ஆசிரமத்தில் இருந்து 41 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரமம் ஒரு குகை போல் இருக்கிறது.

சாமியார் தலைமறைவு

 இதற்கு திகார் சிறையின் நிலை பரவாயில்லை. இதற்குள்ளே செல்வது என்பது மிகவும் கடினமானது. ஒருவேளை ஒருவர் உள்ளே சென்று விட்டால், திரும்பி வருவது என்பது இயலாத ஒன்று. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஆசிரமத்தின் உரிமையாளரான பாபா விரேந்தர் திக்சித் கைது செய்யப்பட வேண்டும் என கூறினார். டெல்லி உயர் நீதிமன்றம் ஆசிரமத்தின் நிறுவனரை ஜனவரி 4ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறியுள்ளது. ஆனால் சாமியார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

பெண்கள் அடைத்து வைப்பு 



அங்கு பெண்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை என்று ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலுக்கு, உயர் நீதிமன்றம் அப்படியென்றால் அவர்களைச் சுதந்திரமாக விட வேண்டியதானே.ஏன் அவர்களை அடைத்து வைத்துள்ளீர்கள் என வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது. தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி.ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் ஆன்மீகத்தின் தலைவர் நேர்மையானவர், உண்மையானவராக இருந்தால் ஏன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை என கேள்வி எழுப்பினர்.

குதித்து இறந்த பெண்கள்

இதனிடையே சாமியார் பாபா விரேந்தர் திக்சித், தன்னை பகவான் கிருஷ்ணர் போல சித்தரித்துக்கொண்டு 16000 பேரை திருமணம் செய்ய முயற்சி செய்ததாகவும், 10 பேரை தினசரியும் படுக்கைக்கு அழைப்பார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர். சாமியாரின் கொடுமையை தாங்க முடியாமல் பல பெண்கள் குதித்து உயிரிழந்தனர் என்றும் பெண்கள் அச்சத்துடன் கூறியுள்ளனர். சாமியார் ஆசிரமம் பற்றி தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.