Tuesday, December 19, 2017

How Lanka

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்


சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சீனா மற்றும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த மூன்று இலங்கை பிரஜைகளிடமிருந்து கைப்பற்றப்ப்டடுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி குறித்த கையடக்க தொலைபேசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.